search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு"

    • தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • கொடைரோடு மற்றும் மாவட்ட எல்லையில் உள்ள பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது.

    கொடைரோடு:

    தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு மற்றும் மாவட்ட எல்லையில் உள்ள பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது.

    அதன்படி கொடைரோடு டோல்கேட்டில் கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.65 லிருந்து ரூ.75ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரேநாளில் பலமுறை பயணிக்க ரூ.95 லிருந்து ரூ.110-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மாதாந்திர கட்டணம் ரூ.1935 லிருந்து ரூ.2215ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வாகனம் ஒருமுறை பயணிக்க ரூ.170லிருந்து ரூ.195ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.3385லிருந்து, ரூ.3880ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டிரக், பஸ் ஆகிய வாகனங்களுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.225லிருந்து ரூ.260ஆகவும், பலமுறை பயணிக்க ரூ.340லிருந்து ரூ.390ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோல் மாதாந்திர கட்டணம் ரூ.6770லிருந்து ரூ.7760 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சு கொண்ட வாகனங்கள் ஒரு முறை பயணிக்க ரூ.365 லிருந்து ரூ.415ஆகவும், பலமுறை பயணிக்க ரூ.545லிருந்து, ரூ.625ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.10880லிருந்து, 12470ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடியில் கார்,வேன், ஜீப் வாகனங்களுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.115-ம், பலமுறை பயணிக்க ரூ.170ம், மாதாந்திர கட்டணம் ரூ.3415ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இலகுரக வாகனம் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.200, பலமுறை பயன்பாட்டிற்கு ரூ.300, மாதாந்திர கட்டணம் ரூ.5975ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிரக், பஸ்களுக்கு ஒருமுறை ரூ.400, பலமுறை ரூ.600, மாதாந்திர கட்டணம் ரூ.11955ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல அச்சுகள் கொண்ட வாகனத்திற்கு ஒருமுறை ரூ.640, பலமுறை ரூ.960, மாதாந்திர கட்டணம் ரூ.19210 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ×