search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலை தீவைத்து எரிப்பு"

    • காலையில் வந்து பார்த்த போது கோவில் பூட்டு திறக்கப்பட்டிருப்பதை கண்டு நிர்வாகி அதிர்ச்சி அடைந்தார்.
    • கோவில் உள்ளே சென்று பார்த்தபோது 7அடி நிம்மாளியம்மன் மரச்சிலையை மர்ம ஆசாமிகள் தீவைத்து எரித்தது தெரியவந்தது.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே ஆதிவராகபுரம் கிராமத்தில் நிம்மாளி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டு தினமும் காலை மட்டும் பூஜைகள் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு அம்மன் கோவில் இரும்பு கேட்டை கோவில் நிர்வாகி கோவிந்தசாமி பூட்டிவிட்டு சென்றார். காலையில் வந்து பார்த்த போது பூட்டு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 7அடி நிம்மாளியம்மன் மரச்சிலையை மர்ம ஆசாமிகள் தீவைத்து எரித்தது தெரியவந்தது.

    இதில் சிலை முழுவதும் எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவில் நிர்வாகி புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அம்மன் சிலை தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×