என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருத்தணி அருகே கோவில் சிலை தீவைத்து எரிப்பு- பக்தர்கள் அதிர்ச்சி
- காலையில் வந்து பார்த்த போது கோவில் பூட்டு திறக்கப்பட்டிருப்பதை கண்டு நிர்வாகி அதிர்ச்சி அடைந்தார்.
- கோவில் உள்ளே சென்று பார்த்தபோது 7அடி நிம்மாளியம்மன் மரச்சிலையை மர்ம ஆசாமிகள் தீவைத்து எரித்தது தெரியவந்தது.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே ஆதிவராகபுரம் கிராமத்தில் நிம்மாளி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டு தினமும் காலை மட்டும் பூஜைகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு அம்மன் கோவில் இரும்பு கேட்டை கோவில் நிர்வாகி கோவிந்தசாமி பூட்டிவிட்டு சென்றார். காலையில் வந்து பார்த்த போது பூட்டு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 7அடி நிம்மாளியம்மன் மரச்சிலையை மர்ம ஆசாமிகள் தீவைத்து எரித்தது தெரியவந்தது.
இதில் சிலை முழுவதும் எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவில் நிர்வாகி புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அம்மன் சிலை தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்