search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவர்கள் தாக்குதல்"

    • பீகாரில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு மத பாடம் எடுப்பதும், பாடத்தை சரியாக படிக்காதவர்களை கடுமையாக தாக்குவதும் தெரியவந்தது.
    • போலீசார் ஆசிரியர் அப்துல்லா, கட்டிட பராமரிப்பாளர் அக்தர் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கொளத்தூர்:

    மாதவரம் பொன்னியம்மன் மேடு, அய்யர் தோட்டம் பகுதியில் பள்ளி உள்ளது.

    இங்கு உள்ள சிறு வர்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும் அவர்கள் அழுதபடி சத்தம் போடுவதாகவும் அப்பகுதி மக்கள் கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜாராமுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து உதவி கமிஷனர் ஆதிமூலம், மாதவரம் இன்ஸ்பெக்டர் காளிராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு 8 வயது முதல் 10 வயது வரை உள்ள 12 சிறுவர்கள் குச்சி மற்றும் கைகளால் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவர்களை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் பீகாரில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு மத பாடம் எடுப்பதும், பாடத்தை சரியாக படிக்காதவர்களை கடுமையாக தாக்குவதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் ஆசிரியர் அப்துல்லா, கட்டிட பராமரிப்பாளர் அக்தர் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×