என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறு தொழில் தொடங்க கடன் உதவி"
- திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்விற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது.
- சிறு தொழில் தொடங்க ரூ.5000 முதல் ரூ.25,000 வரை குறைந்த சதவீதம் வட்டியில் கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்விற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறுதொழில் கடன் வழங்கிட திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் 34 கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் 198 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும், கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழில் தொடங்கிட விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து இதர ஆவணங்களுடன் இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் அலுவலகம், அருகில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் 34 கிளைகளிலும், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்டத்திலுள்ள 198 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் வழங்கி பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நபர் பிணையம் என்பது அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் உறுப்பினர்கள், நகர கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள், மத்திய வங்கி இணை உறுப்பினர்கள் அல்லது மத்திய வங்கியில் இட்டு வைப்புதாரர்கள் ஆகியோர் ஆவர்.
கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட மகளிர்களுக்கான கடன்:-
திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 34 கிளைகள் மூலம் சிறு தொழில் தொடங்க ரூ.5000 முதல் ரூ.25,000 வரை குறைந்த சதவீதம் வட்டியில் கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் அருகிலுள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் அதற்கான படிவத்தை உரிய இணைப்புகளுடன் பூர்த்தி செய்து வழங்கி பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்