search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரயில்"

    • இரவு 11:55 க்கு பெங்களூருவில் புறப்படும்
    • கண்ணூரில் இருந்து மார்ச் 8ம் தேதி இரவு 10:40க்கு புறப்படும்.

    திருப்பூர் :

    பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க பெங்களூரு - கண்ணூர் இடையே சிறப்பு ரயில் நாளை (7 ம் தேதி) இயக்கப்படுகிறது. அதன்படி நாளை இரவு, 11:55 க்கு பெங்களூருவில் புறப்படும் ரயில் (06501), மறுநாள் மதியம், 2:00 மணிக்கு கண்ணூர் சென்று சேரும். கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொர்ணூர், திரூர், கோழிக்கோடு ஸ்டேஷன்களில் ரயில் நின்று செல்லும்.

    மறுமார்க்கமாக கண்ணூரில் இருந்து மார்ச், 8ம் தேதி, இரவு, 10:40க்கு புறப்படும் ரயில், மறுநாள் மதியம், 1:00 மணிக்கு பெங்களூரு சென்று சேரும்.இத்தகவலை தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க யஷ்வந்த்பூர் கண்ணுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
    • இதில், ஏசி இரண்டடுக்கு பெட்டிகள், 2, மூன்றடுக்கு, படுக்கை வசதி , பொதுப்பிரிவு, பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க யஷ்வந்த்பூர்-கண்ணுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.தமிழகம், கேரளாவில் தொடர் பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக, யஷ்வந்த்பூர்-கண்ணுார் இடையே(வ.எண்:06283) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.நாளை காலை, 7:40 மணிக்கு புறப்படும் ரயில், இரவு, 8:30க்கு கண்ணுார் சென்றடையும். நாளை இரவு, 11:00க்கு கண்ணுாரில் இருந்து புறப்படும் ரயில்(06284) மறுநாள் மதியம், 1:00க்கு யஷ்வந்த்பூர் அடைகிறது. இதில், ஏசி இரண்டடுக்கு பெட்டிகள், 2, மூன்றடுக்கு, 6, படுக்கை வசதி, 7, பொதுப்பிரிவு, 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். பனஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்துார், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், சொரணுார், திரூர், கோழிக்கோடு உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    ×