search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகரெட் புகை"

    சிகெரெட் பிடிப்பவர்கள் இழுத்துவிடும் புகையால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஆண்டுதோறும் 7300 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    பீடி, சிகரெட், பான்பராக், ஹன்ஸ் உள்ளிட்ட மெல்லும் புகையிலை பொருட்களால் புற்றுநோய்க்கு உள்ளாகி உலகம் முழுவதும்  கோடிக்கணக்கானவர்கள் பலியாகி வருகின்றன. இதுதவிர புற்றுநோய்சார்ந்த இறப்புகளில் 40 சதவீதம் புகையிலை பழக்கத்தால் உண்டாவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிகெரெட் பிடிப்பவர்கள் இழுத்துவிடும் புகையால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஆண்டுதோறும் 7300 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.

    இப்படி அடுத்தவர்கள் வெளியிடும் பீடி, சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல், தொடர் இருமல், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று, நுரையீரல் அழற்ச்சி நோய் போன்றவை படிப்படியாக ஏற்பட்டு இறுதியில் அது நுரையீரல் புற்றுநோயாக மாறி மரணத்தில் முடிவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாடு திட்டத்தின் ஆலோசகர் நரேஷ் புரோஹித் குறிப்பிட்டுள்ளார்.
    சிகரெட் புகையை முகத்தில் ஊதிய தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ராயபுரம்:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் அஸ்லாம் (25). இவர் சென்னையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். பின்னர் அவர் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள நண்பரை பார்க்க வந்தார்.

    இருவரும் ஒரு கடையின் அருகே நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அஸ்லாம் புகை பிடித்தார். அந்த புகை அருகே நின்ற அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் முகத்தில் பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சசிகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்லாமை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    முதுகு, இடுப்பில் பலத்த காயம் அடைந்த அஸ்லாமுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிது.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.

    ×