search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தன மரங்கள்"

    • அரசு அனுமதியுடன் சந்தன மரங்கள் வளர்த்து வருகிறார்.
    • சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மா.புடையூர் மயிலாடும்பாறை பகுதியில் வசித்து வருபவர் நாராயணசாமி (வயது 72). இவர் அந்த பகுதியில் தோட்டத்து வீட்டில் 22 ஆண்டுகளாக குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். எனவே அந்த பகுதியில் அரசு அனுமதியுடன் சந்தன மரங்கள் வளர்த்து வருகிறார். இதனை வெட்டுவதற்கு நாராயணசாமி அனுமதி பெற்று இருந்தார். 

    நேற்று இரவு மர்மநபர்கள் அங்கு சென்றனர். அவர்கள் சந்தனமரங்களை வெட்டி கடத்தி சென்று உள்ளனர். இன்று காலை நாராயணசாமி ேதாட்டத்துக்கு சென்றார். அப்போது சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    ×