search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கு தொழில்"

    • வரத்து குறைவால் சங்கு தொழில் நலிந்து போனது.
    • ஆன்மிக வழிபாடுகளிலும் முக்கிய பங்காற்றும் சங்கு தொழில் நலிந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் களை கட்டி வந்த சங்கு விற்பனை தற்போது வரத்து குறைந்த தால் மந்த நிலையில் நடந்து வருகிறது.

    கடலுக்கு செல்லும் மீன வர்கள் வலைகளில் மீன்கள் மட்டுமில்லாமல் அரிய வகை சங்கு வகைகளும் அகப்படும். வலம்புரி சங்கு, பால் சங்குகளை பூஜை அறையில் வைத்து வழிபடு வதற்காக மக்கள் விரும்பி வாங்கு கின்றனர். இதன் காரணமாக இந்த சங்குகளுக்கு வியாபாரிகள் மத்தியில் எப்போதும் கிராக்கி இருந்து வருகிறது.சிலந்தி சங்கு, கூம்பு சங்கு, குதிரை முள்ளி சங்கு போன்ற அபூர்வ வகை சங்குகளை பிடிக்க தடை உள்ளதால் வலையில் அகப்பட்டாலும் கடலோ ரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

    இது நாளடைவில் மக்கி உடைந்து விடுகிறது. சங்கு குளிக்கும் தொழிலில் உழைப்பு அதிகமாகவும், ஊதியம் குறைவாகவும் உள்ளது. சங்குகள் வரத்து குறைவால் சங்கு தொழில் நலிவடைந்து வருகிறது.

    இந்த தொழிலில் ஈடுபட்ட பலர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். அலங்கார கைவினைப் பொருட்களி லும், ஆன்மிக வழிபாடு களிலும் முக்கிய பங்காற்றும் சங்கு தொழில் நலிந்து வருகிறது.

    ×