என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சகோதரர்கள் தர்ணா"
- நிலத்தை அளந்து கொடுக்காததால் ஆத்திரம்
- மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
குடியாத்தம் அடுத்த மேல் சேம்பள்ளியை சேர்ந்த பழனி கார்த்திகேயன் ஆகியோர் தங்களது நிலத்தை அளந்து கொடுக்க கோரி 2 ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை நிலத்தை அளந்து கொடுக்கவில்லை எனக் கூறி சகோதரர்கள் இருவரும் காயிதே மில்லத் அரங்கம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு அளிக்க வைத்தனர்.
குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, பேரணாம்பட்டு அடுத்த செண்டத்தூரில் அரசு பள்ளி கூட்டுறவு வங்கி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள பகுதியில் 3 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் வங்கி மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கின்றனர். எனவே டாஸ்மாக்களே அகற்ற வேண்டும் என மனு அளித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்