search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோஷ்டி"

    • இரு தரப்பைச் சேர்ந்த 16 பேர் மீது வழக்கு
    • தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    தென்தாமரை குளம் அருகே உள்ள கீழ மணக்குடி யைச் சேர்ந்தவர் விக்டர் (வயது 35). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் 

    அப்போது அங்கு வந்த சார்லஸ் (47), ஜான் பிரிட்டோ (26) ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசி தகறாறு செய்து உள்ள னர். மேலும் அரிவா ளால் விக்டரின் இடது கன்னத்தில் வெட்டினர். இதை தடுக்க வந்த ஜோசப் பிராங்கோ (30), சகாயராஜ்(57) ஆகியோரும் அரிவாளால் வெட்டப்பட்டதாக தென் தாமரை குளம் போலீ சில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் அவர்களுடன் வந்த சிலர் தனது தரப்புக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும் விக்டர் புகாரில் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த சகாய மிதின்மோன்( 18) என்பவர் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், நான் நண்பர்களு டன் விக்டர் வீட்டு பக்கம் சென்ற போது சுந்தர்( 42), சகாயராஜ், பிராங்கோ, ஜோசப் ஆன்றணி (50), தாசன் (45) ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசி தாக்கி மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

    இந்த கோஷ்டி மோதலில் காயமடைந்த விக்டர், ஜோசப் பிராங்கோ, சகாயராஜ் ஆகியோர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை யிலும், சகாய மிதின் மோன் கன்னியாகுமரி அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

    இது குறித்து தென் தாமரை குளம் போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பபையும் சேர்ந்த 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். கடந்த 18-ந் தேதி அஜின் (22) என்பவர் வேகமாக பைக் ஓட்டி வந்து, சகாய ஜோசப் (57) என்பவர் மீது மோதிய தாகவும் இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாகவே இந்த மோதல் நடந்துள்ளது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ×