search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் அர்ச்சகர்"

    • சுந்தரமூர்த்தி கோவில் அர்ச்சகர், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
    • சசிகலா, ஊரில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே க.அலம்பலம் கிராமத்வதை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 70). கோவில் அர்ச்சகர், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுந்தரமூர்த்தி, அவரது மனைவி சசிகலா ஆகியோர் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கடந்த 17-ந் தேதி சென்றனர். அங்கு சுந்தரமூர்த்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்த டாக்டர்கள், சுந்தரமூர்த்தியின் ஆதார் கார்டு மற்றும் காப்பீட்டு உதவி திட்ட அடையாள அட்டையை 20-ந்தேதி கேட்டுள்ளனர். இதையடுத்து சசிகலா, ஊரில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்தார். வீட்டின் சாவி மற்றும் ஆதார் கார்டு உள்ள இடத்தை கூறினார்.


    அதனை எடுத்து உள்ளே சென்று ஆதார் கார்டு மற்றும் காப்பீட்டு அட்டையை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் போடுமாறு கூறினார். இதனைத் தொடர்ந்து சசிகலாவின் உறவினர் வீட்டின் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றார். வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து உடனடியாக சசிகலாவிடம் கூறினார். உடனடியாக சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த சசிகலா, பீரோவில் இருந்த 7 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி, ரூ.20 ஆயிரம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக கச்சிராயபாளையம் போலீசாரிடம் நேற்று (21-ந் தேதி) புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கச்சிராயபாளையம் போலீசார், கோவில் அர்ச்சகர் வீட்டில் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    ×