search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்டக்குப்பம்"

    கோட்டக்குப்பத்தில் நீச்சல் குளத்தில் குளித்த ஓட்டல் ஊழியர் நீரில் மூழ்கி பலியானார்.

    சேதராப்பட்டு:

    சென்னை ஆவடி நந்தவனம் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கட்டிட காண்டிக்டராக்டர்.இவரது மனைவி ஜீவாஆசிரியை. இவர்களது மகன் தினேஷ்குமார் (வயது24). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை படித்து விட்டு அங்குள்ள ஒரு பிரபல ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்கள் 4 பேருடன் புதுவைக்கு சுற்றுலா வந்தார்.

    கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி புதுவையில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து வந்தனர். நேற்று மதியம் அவர்கள் மதுஅருந்திவிட்டு தங்கி இருந்த ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் ஆனந்தமாக குளித்தனர். சாப்பிடுவதற்காக நண்பர்கள் நீச்சல் குளத்தில் இருந்து வெளியேறிய நிலையில் தினேஷ்குமார் மட்டும் தொடர்ந்து நீச்சல் குளத்தில் குளித்தார்.

    ஆனால் வெகுநேரமாகியும் தினேஷ்குமார் ஓட்டல் அறைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் நீச்சல் குளத்தில் இறங்கி பார்த்தனர். அப்போது நீரில் மூழ்கியபடி தினேஷ்குமார் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தினேஷ்குமாரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தினேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×