search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலுசுகள்"

    • செல்வி நடுக்குப்பத்தில் உள்ள முந்திரி கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
    • இதுகுறித்து பண்ருட்டி போலீசார்வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி முத்து நாராயணபுரம் பாலூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர்அய்யனார். இவரதுமனைவி செல்வி வயது (32). அய்யனார் கடந்த 3வருடத்திற்குமுன்பு இறந்துவிட்டார். செல்வி நடுக்குப்பத்தில் உள்ள முந்திரி கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்களும், ஒருமகளும் உள்ளனர். இவரது மகன்கள் இருவரும் கடலூர் செம்மண்டலம் அரசு ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார்கள். இவரது மகள் செல்வகுமாரி பட்டாம்பாக்கம் போர்டிங் பள்ளியில்அங்கேயே தங்கி பிளஸ்-2படித்து வருகிறார். செல்வி கடந்த 5-ந் தேதி காலை 10 மணியளவில் தனது வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நடுக்குப்பத்தில் உள்ள தனது அக்காள் சிவசக்தி வீட்டில் மகன்களுடன்தங்கி விட்டார்.

    கடந்த 9 -ந் தேதி காலை 6மணியளவில் வீட்டிற்கு சென்று பார்த்த போது இவரது வீட்டின் பின் பக்கமுள்ள கீற்றினை பிரித்து யாரோ வீட்டினுள் நுழைந்து வீட்டில் இருந்த இரும்பு பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் செயின், ½ பவுன் சுத்து மாட்டல் -1 ஜோடி, 2 ஜோடி கொலுசுகள் ஆகியவைகளை திருடி சென்றதுதெரிய வந்தது. அக்கம் பக்கம் விசாரித்தும் எந்த தகவலும்தெரியா ததால்பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் திருட்டுபோன நகைகளை கண்டுபிடித்து தருமாறு செல்விபுகார் கொடுத்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார்வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ,சப் இன்ஸ்பெக்டர் கள் தங்கவேலு,பிரசன்னா, ேபாலீஸ்காரர்கள் அன்ப ரசு, ஷரிகரன்ஆகியோர் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவி ட்டனர். போலீசாரின் தீவிரவிசாரணையில் அதே ஊரை சேர்ந்த முத்தாலு(35) நகையை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தப்பியோட முயன்ற அவனை கைது செய்து அவனிடமிருந்துசெல்வி வீட்டில் திருடிய நகைகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×