search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள பாதிரியார்"

    கேரளாவில் பாதிரியாரின் பாலியல் புகாரை வாபஸ் பெறக்கோரி கன்னியாஸ்திரியை மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் பிரான்கோ முல்லக்கல்.

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ஆயராக இருக்கும் பிரான்கோ முல்லக்கல், கோட்டயம், குரு விலங்காடு பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக கோட்டயம் போலீசில் அந்த கன்னியாஸ்திரி புகார் கொடுத்தார். அதில் தன்னை ஆயர் பிரான்கோ முல்லக்கல் 13 முறை பாலியல் பலாத்காரம் செய்தார் எனக்கூறியிருந்தார்.

    இது தொடர்பாக கோட்டயம் போலீசார் ஆயர் பிரான்கோ முல்லக்கல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்காக ஜலந்தர் சென்று அவரிடம் நேரில் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான நடவடிக்கைகளை கோட்டயம் போலீசார் மேற்கொண்டுள்ளனர். மேலும் கன்னியாஸ்திரி கொடுத்த புகார் குறித்த ஆதாரங்களையும் திரட்டி வந்தனர்.

    இந்நிலையில் ஆயர் பிரான்கோ முல்லக்கல் மீதான புகாரை வாபஸ் பெற வைக்கும் நடவடிக்கைகளில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக போலீசில் சாட்சியம் அளித்த கன்னியாஸ்திரிகளை மிரட்டி புகாரை வாபஸ் பெறவைக்கும் முயற்சிகளும் நடந்தன.

    இதில் அனுபமா என்ற கன்னியாஸ்திரியை ஆயரின் ஆதரவாளரான பாதிரியார் ஒருவர் மிரட்டும் ஆடியோ பேச்சு நேற்று மலையாள ஊடகங்களில் வெளியானது.

    11 நிமிடங்கள் ஓடும் அந்த ஆடியோவில் பேசும் பாதிரியார், வழக்கை வாபஸ் பெற்றால் கன்னியாஸ்திரியின் குடும்பத்திற்கு 10 ஏக்கர் நிலமும், புதிய கான்வென்ட் கட்டிடமும் கட்டி தரப்படும் என ஆசைவார்த்தை கூறுகிறார்.

    மேலும் வழக்கை வாபஸ்பெறாவிட்டால் கன்னியாஸ்திரி பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக அசாம், ஒடிசா மாநிலங்களுக்கு அவர் மாற்றப்படுவார் எனவும் பாதிரியார் எச்சரிக்கிறார்.

    ஆனால் கன்னியாஸ்திரி, பாதிரியாரின் மிரட்டலுக்கு பயப்படபோவதில்லை எனக்கூறியதோடு, வழக்கை எதிர்கொள்ளப் போவதாகவும் கூறுகிறார்.

    இது பற்றி பாலியல் புகாரை விசாரிக்கும் தனிப்படை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இது பற்றி கூறும் போது, இந்த விவகாரம் வழக்குக்கு கூடுதல் பலம் சேர்க்கும். எனவே குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கில் இருந்து தப்பிக்க முடியாத நிலை ஏற்படும், என்றனர். #tamilnews
    கேரளாவில் குடும்ப பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி பெண்ணை கற்பழித்த பாதிரியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற ஒரு பெண்ணை மிரட்டி அந்த பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மேலும் அதே ஆலயத்தை சேர்ந்த 3 பாதிரியார்களும் அந்த பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார்கள். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் செய்ததை தொடர்ந்து 4 பாதிரியார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சூர் அருகே உள்ள முள்ளக்கல்லை சேர்தவர் பிராங்கோ. இவர் ஜலந்தரில் பி‌ஷப்பாக உள்ளார். இந்த பி‌ஷப் மீது கோட்டயம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்து உள்ளார். 2 வருடமாக தன்னை மிரட்டி 13 முறை பி‌ஷப் பிராங்கோ பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    இதைதொடர்ந்து அந்த பி‌ஷப்பை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். முன்னதாக இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பி‌ஷப்புக்கு நோட்டீசு அனுப்பவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த 4 பாதிரியார்கள் மீது பாலியல் புகார் கூறப்பட்ட அதே கிறிஸ்தவ ஆலயத்தை சேர்ந்த இன்னொரு பாதிரியாரான பினுஜார்ஜ் என்பவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பாதிரியார் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலப்புழை மாவட்டத்தில் பாதிரியாராக பணிபுரிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெண் தனக்கும் தனது கணவருக்கும் ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்சினை பற்றி அந்த பாதிரியாரிடம் கூறி அதை தீர்த்து வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இந்த நிலையில் அந்த பாதிரியார் மாவேலிகரைக்கு மாற்றலாகி சென்றதால் அந்த பெண்ணை அங்குள்ள ஆலயத்திற்கு வரவழைத்து குடும்ப பிரச்சினையை தீர்க்க ஆலோசனை வழங்குவதாக கூறி பலாத்காரம் செய்துவிட்டார்.

    இதுபற்றி அந்த பெண் பி‌ஷப்பிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே சமயம் பாதிரியார் பினு ஜார்ஜ் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு செய்ததால் காயங்குளம் போலீசில் தற்போது அந்த பெண் புகார் செய்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து பாதிரியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேரளாவில் தொடர்ந்து பாதிரியார்கள் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தொடர்பாக பாதிரியார்களின் முன் ஜாமீன் 9-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. #KeralaPriests
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பத்தினம் திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி பகுதியைச்சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாதிரியார்கள் 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பெண்ணின் கணவர் வாட்ஸ் அப்பில் வேண்டுகோள் விடுத்தார்.

    சமூக ஊடகங்களில் பரவிய இத்தகவல் குறித்து கேரள முன்னாள் முதல் மந்திரி அச்சுதானந்தன் கேரள டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதினார். அதில், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென்று கேட்டிருந்தார்.

    அதன்படி, டி.ஜி.பி. உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது அவர், மனைவியின் வாக்குமூலத்தையும் போலீசாரிடம் தாக்கல் செய்தார்.

    வாக்குமூலத்தில் அந்த பெண் கூறி இருப்பதாவது:-

    16 வயதில் என்னை பாதிரியார் ஆபிரகாம் வர்கீஸ் பாலியல் பலாத்காரம் செய்தார். எனக்கு திருமணம் முடிந்த பின்பு இந்த சம்பவத்திற்காக பாவ மன்னிப்பு கேட்டு பாதிரியார் ஜோப் மேத்யூவிடம் அறிக்கை செய்தேன். அப்போது நான் கூறியவற்றை சபை மரபுப்படி அவர், வெளியே கூற மாட்டார் என நம்பினேன்.

    ஆனால் அவர், இதனை பாதிரியார் ஜெய்ஷ் கே ஜார்ஜிடம் தெரிவித்துள்ளார். ஜெய்ஷ் கே ஜார்ஜ் என்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவர். ஒருநாள் ஜெய்ஷ் கே ஜார்ஜ் என்னை அவரது இல்லத்திற்கு வரவழைத்தார். அங்கு சென்றதும் பாவ மன்னிப்பின்போது நான், பாதிரியார் ஜோப் மேத்யூ விடம் கூறிய தகவல்களை என்னிடம் கூறி அவரது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டினார்.

    பின்னர் அவரும் என்னை பலாத்காரம் செய்தார். இவர்கள் 3 பேரும் என்னை பாலியல் தொந்தரவு செய்தது இன்னொரு பாதிரியார் ஜாண்சன் வி மேத்யூவிற்கும் தெரிந்தது. அவரும் என்னை மிரட்டி பாலியல் தொல்லை செய்தார்.

    இவ்வாறு அந்த வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.

    இதையடுத்து போலீசார் புகாருக்கு ஆளான பாதிரியார்கள் ஆபிரகாம் வர்கீஸ், ஜோப் மேத்யூ, ஜெய்ஷ் கே ஜார்ஜ், ஜாண்சன் வி மேத்யூ ஆகிய 4 பேர்மீதும் கற்பழிப்பு, பெண்மையை இழிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தவும் போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.

    போலீசாரின் நடவடிக்கையை அறிந்து பாதிரியார் ஆபிரகாம் வர்கீஸ் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அப்போது அவர், இளம்பெண்ணுடன் அவரது ஒப்புதலுடனேயே உறவு வைத்திருந்ததாக அந்த பெண்ணே எழுதி கொடுத்த வாக்குமூலத்தையும் தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த கோர்ட்டு, பாதிரியார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பெண்ணின் வாக்கு மூலத்தில் நம்பகத்தன்மை இல்லை. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருந்தால் பாதிரியாரை குற்றவாளியாக கருத முடியாது.

    எனவே இளம்பெண் போலீசில் அளித்த வாக்குமூலம் கிடைக்காமல் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே முன் ஜாமீன் கோரும் மனுவை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அன்று போலீசில் இளம்பெண் அளித்த வாக்குமூலத்தை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார்.

    இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை வருகிற 9-ந்தேதி நடக்கிறது. #KeralaPriests
    ×