search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூப்பிடு பிள்ளையார் கோவில்"

    • காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்து வருதல்.
    • பிள்ளையார் கலைவள்ளி கும்மி குழுவினரின் கும்மியாட்டம் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக திருக்கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து நிறைவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கும்பாபிஷேகப் பணிகள் 24ந் தேதி காலை 8 மணி அளவில் காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    இந்த நிலையில் நேற்று காலை 6:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருமஞ்சன வழிபாடு, பேரொளி வழிபாடு, நடைபெற்று காலை 9:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை துவங்கியது. திருக்குடங்கள் வேள்விசாலையில் எழுந்திருதல், 108 மூலிகை ஆகுதி, திருமுறை விண்ணப்பம், விமான கலசம் நிறுவுதல், எண் வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5;30 மணிக்கு, பிள்ளையாருக்கு மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இதில் திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு ஆகியவை நடைபெற்றது. கூப்பிடு பிள்ளையார் கலைவள்ளி கும்மி குழுவினரின் கும்மியாட்டம் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர். இந்த நிலையில் இன்று காலை யாக வேள்வியுடன் கும்பாபிஷேக பூஜை துவங்கியது. 8: 30 மணிக்கு விமான கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூப்பிடு பிள்ளையாருக்கு அபிஷேக அலங்கார பூஜை நடைபெ ற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கூப்பிடு பிள்ளையார் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காரணம்பேட்டை மெயின் ரோட்டில் இருந்து ஊர் முழுவதும் அலங்கார விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு அந்தப் பகுதியே மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

    காரணம்பேட்டை கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, கரடிவாவி, சூலூர், பல்லடம், திருப்பூர் கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து பக்தர்கள் வந்து கூப்பிடு பிள்ளையார் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று வருகின்றனர்.

    • இக்கோவில் புனரமைக்கப்பட்டு நாளை 26-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • புனித நீர் வழிபாடுடன் துவங்கி மூத்த பிள்ளையாருக்கு முதற்கால வேள்வியுடன் யாக பூஜைகள் துவங்கியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் இக்கோவில் புனரமைக்கப்பட்டு நாளை 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை 8 மணி அளவில் காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கேரள செண்டை மேளம், நாதஸ்வர மேளதாளத்துடன் ஊர்வலம் முக்கிய ரோடுகளின் வழியாக கூப்பிடு பிள்ளையார் கோவிலை வந்தடைந்தது.

    இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடுடன் துவங்கி இரவு 7:45 மணி அளவில் மூத்த பிள்ளையாருக்கு முதற்கால வேள்வியுடன் யாக பூஜைகள் துவங்கியது. அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கூப்பிடு பிள்ளையார் காவடிக் குழுவினரின் காவடியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

    • கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 50க்கும் மேற்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலில், கூப்பிடு பிள்ளையார் கலை வள்ளி கும்மி ஆட்டம் குழுவின் 5-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து சிறுமிகள்,பெண்கள் ஆடிய வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கும்மியாட்ட ஆசிரியர்கள் பெரியசாமி, கலையரசி, முருகன் -வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும் பாடி கும்மி ஆட்ட குழுவினரை உற்சாகப்படுத்தினர்.கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி, கூப்பிடு பிள்ளையார் அறக்கட்டளை நிர்வாகி சின்னச்சாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கும்மி ஆட்டத்தை கண்டு களித்தனர்.முன்னதாக 50க்கும் மேற்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    ×