search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு கடன் சங்கத்தை"

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்காமல் காலம் தாழ்த்து வதை கண்டித்து பாட்டாளி மக்கள் நிர்வாகிகள் விவசாயிகளுடன் சங்கத்தை முற்றுகையிட்டனர்.
    • இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கூட்டுவு சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்காமல் காலம் தாழ்த்து வதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.மனோகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் விவசாயி களுடன் சங்கத்தை முற்றுகையிட்டனர்.

    இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கூட்டுவு சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே விண்ணப்பம் கொடுத்தவர்களை உடனடியாக உறுப்பினராக சேர்த்துக்கொண்டதாலும், புதிதாக கொடுப்பவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொ ள்ளப்பட்டு பரிசீலி க்கப்பட்டு உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதில் மாவட்ட செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில துணைத்தலைவர் எஸ்.எல்.பரமசிவம், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சேக் மொய்தீன், மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் எம்.முனுசாமி, மாவட்ட துணைச் செயலா ளர்கள் ஆண்டவர், ஆர்.பி.நடராஜ்,

    மாவட்ட துணைத் தலைவர் அந்தியூர் கார்த்தி, முன்னாள் ஒன்றிய தலைவர் கண்ணன், முன்னாள் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதந்திர ராஜ், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×