search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடலூரில் இ சேவை மையம் முடக்கம்"

    கூடலூரில் இ-சேவை மைய இணையதளம் முடக்கத்தால் சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    பொதுமக்கள் சாதி, வருமானம், இருப்பிடம், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் இ-சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. கூடலூர் தாலுகாவில் உள்ள பொதுமக்கள் சான்றிதழ்கள் பெறுவதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகை தருகின்றனர். இதேபோல் ஆதார் புகைப்படம் எடுக்கும் மையமும் இங்கு இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அரசு இ-சேவை மையத்தில் சான்றிதழ்கள் கிடைப்பதில் காலதாமதம் ஆகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் விளக்கம் கேட்டால் இ-சேவை மைய இணையதள சேவை சரிவர செயல்படாமல் உள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி வருகின்றனர். இதை அறியாத பொதுமக்கள் தினமும் வந்து ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர்.

    மேலும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ்கள் கிடைக்காமல் வாரக்கணக்கில் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொதுத்தேர்வுகள் முடிந்து உயர்கல்வி படிப்பதற்காக மாணவர்கள் சான்றிதழ்கள் பெறுவதற்காக இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் இ-சேவை மைய இணையதள சேவை முடக்கம் காரணமாக சான்றிதழ்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
    ×