search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தையுடன் தாய் மாயம்"

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட பிரவீனா தனது குழந்தையுடன் கடந்த 8-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள நாப்பினாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது42). இவரது மனைவி பிரவீனா (30). இவர்களுக்கு 6 வயதில் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வீட்டில் மீண்டும் தகராறு நடந்தது.

    இதில் மனமுடைந்து காணப்பட்ட பிரவீனா தனது குழந்தையுடன் கடந்த 8-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான அவர்களை தேடி வருகின்றனர். 

    ×