search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தகராறில் குழந்தையுடன் தாய் மாயம்
    X

    குடும்ப தகராறில் குழந்தையுடன் தாய் மாயம்

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட பிரவீனா தனது குழந்தையுடன் கடந்த 8-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள நாப்பினாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது42). இவரது மனைவி பிரவீனா (30). இவர்களுக்கு 6 வயதில் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வீட்டில் மீண்டும் தகராறு நடந்தது.

    இதில் மனமுடைந்து காணப்பட்ட பிரவீனா தனது குழந்தையுடன் கடந்த 8-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×