search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளிகள் காவல் நீட்டிப்பு"

    அயனாவரம் சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதான 17 பேரின் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி மஞ்சுளா உத்தரவு பிறப்பித்தார். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி காட்சி மூலம் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி மஞ்சுளா நேற்று உத்தரவு பிறப்பித்தார். 17 பேரையும் முதல் முறையாக கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது அவர்களை வக்கீல்கள் சரமாரியாக தாக்கினர். இதன் காரணமாக அவர்களின் காவல் நீட்டிப்பு நேற்று காணொலி காட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை அயனாவரம் சிறுமி வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.



    அதன்பின்னர் புழல் சிறையில் கைதிகள் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னை சீரழித்த நபர்களை அடையாளம் காட்டினார். இதையடுத்து குற்றவாளிகள் 17 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.

    போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் அனைவரும் இன்று மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதேசமயம் நீதிமன்றக் காவலும் முடிவடைந்தது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். #ChennaiGirlHarassment #POCSOAct
    ×