search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்டையில் மூழ்கி மூதாட்டி சாவு"

    • துணி துவைக்க சென்ற மூதாட்டி குட்டையில் மூழ்கி இறந்து கிடந்தார்.
    • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள கணவாய்பட்டி மலைப்பட்டியை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி ராமக்காள் (வயது 75). இவர் கடந்த வாரம் சோளக்குளத்துப்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார். நேற்று மாலை அருகில் உள்ள சங்கிலியான் கோவில் பகுதியில் துணி துவைப்பதற்காக சென்றார்.

    ஆனால் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்நிலையில் இன்றுகாலை அங்குள்ள ஒரு குட்டையில் மூழ்கி ராமக்காள் இறந்து கிடந்தார். தண்ணீரில் இறங்கியபோது கால்வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் வந்து அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×