search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் சப்ளை நிறுத்தம்"

    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
    • தெருக்களுக்கு லாரி விநியோகம் வழக்கம் போல் இடையூறு இல்லாமல் நடக்கும்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோயம்பேடு ரவுண்டானா மேம்பாலத்துக்கு கீழ் உள்ள குடிநீர் பிரதான குழாயில் இணைப்பு பணிகள் நடப்பதால் வருகிற 20-ந் தேதி (புதன்) காலை 6 மணி முதல் 22-ந் தேதி காலை 6 மணி வரை 2 நாட்கள் அண்ணாநகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் பெற்றுக் கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கும், அழுத்தம் குறைவாக உள்ள பகுதிகளுக்கும் குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பப்படும். லாரிகளில் தண்ணீர் சப்ளை நடைபெறும். நிரப்பப்படும். தெருக்களுக்கு லாரி விநியோகம் வழக்கம் போல் இடையூறு இல்லாமல் நடக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×