search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணசாமி கோவில்"

    • வருகிற 27-ந் தேதி உறியடி திருவிழா
    • பத்தாம் திருவிழா ஆராட்டு நிகழ்ச்சியோடு முடிவடைகிறது.

    கன்னியாகுமரி:

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தோவாளை கிருஷ்ணசுவாமி கோவிலில் கொடியேற்று விழா நடை பெற்றது.

    வருகிற 27-ந் தேதி உறியடித் திருவிழா நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் நேற்று காலையில் கணபதி ஹோமம், கலச பூஜை, அலங்காரம் பல்லக்கில் வீதி உலா வருதல், கொடி பூசை திரு கொடியேற்று விழா நடைபெற்றது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் அறநிலைய துறை கண்கா ணிப்பாளர் ஆனந்தன் ஸ்ரீகாரியம் சேர்மராஜ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், பஞ்சாயத்து தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் தாணு, பக்தர் சங்க நிர்வாகிகள் கண்ணன், சிதம்பரதாணு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    7-வது திருவிழா அன்று விநாயகப் பெருமான், முருகப்பெருமான், அம்மை யப்பர் கிருஷ்ண சாமி வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறும். 9-ம் திருவிழா அன்று உறியடி மகா உற்சவம் நடைபெறும். பத்தாம் திருவிழா ஆராட்டு நிகழ்ச்சியோடு முடிவடைகிறது.

    ×