search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா"

    சர்வதேச செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் வீரர் என்ற சாதனைப் படைத்த சிறுவன் பிரக்ஞானந்தாவை பாரட்டிய தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று நினைவு பரிசு வழங்கினார். #PragGnanandhaa
    சென்னை:

    சென்னை முகப்பேரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவரான பிரக்ஞானந்தா, இத்தாலியில் நடந்த கிரெடின் ஓபன் செஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 2-வது இடம் பிடித்ததுடன், செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்று சாதனைப் படைத்தார்.

    பிரக்ஞானந்தாவின் வயது 12 ஆண்டு 10 மாதங்கள் ஆகும். இதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற இளம் இந்திய வீரர், ஒட்டுமொத்தத்தில் 2-வது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். செஸ் போட்டியில் இளம் வயதிலேயே புதிய உச்சத்தை தொட்ட பிரக்ஞானந்தா நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு பள்ளி மற்றும் உறவினர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இளம்வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாரட்டுக்கள் தெரிவித்தார். இது தொடர்பாக ராஜ்பவனின் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரக்ஞானந்தாவுக்கு கவர்னர் நினைவு பரிசு அளித்தார். மற்றும் எதிர்காலத்தில் தொடர்ந்து பல சாதனைகள் புரிய வேண்டும் என வாழ்த்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்தனர். கவர்னரிடம் வாழ்த்துகள் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பிரக்ஞானந்தா தெரிவித்தான். #PragGnanandhaa
    ×