search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்பந்துபோட்டி"

    • 16 அணிகள் பங்கேற்றன.
    • முதல் கோல் அடித்த வீரருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரியில் நீலகிரி மாவட்ட கால்பந்தாட்ட கழகம் 50-ம் ஆண்டு பொன் விழாவையொட்டி மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடந்தது.

    போட்டியில் நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருநெல்வேலி, சிவகங்கை,மதுரை, ஈரோடு, திண்டுக்கல்,சென்னை, கோயமுத்தூர்,சேலம், வேலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன.

    அரையிறுதி போட்டியில் நீலகிரி, திருவள்ளூர், சென்னை, தஞ்சாவூர் ஆகிய அணிகள் இவிளையாடின. இதில் நீலகிரி அணியும் தஞ்சாவூர் அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

    இறுதிப்போட்டியில் நீலகிரி அணி 4 கோல்களும், தஞ்சாவூர் அணி 1 கோலும் அடித்தன. இதில் நீலகிரி அணி 4-1 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஆட்ட நாயகன், சிறந்த கால்பந்தாட்ட வீரர் போன்ற சிறப்பு பரிசுகள் கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இறுதிப்போட்டியில் முதல் கோல் அடித்த வீரருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 2-ம் கோல் அடித்த வீரருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்து.

    போட்டி ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட கால்பந்தாட்ட கழக உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    ×