என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காலிகுடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்"
- பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
- தற்காலிகமாக மாற்று ஏற்பாடு மூலம் குடிநீர் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் மேல் கல்பட்டு தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பழுதடைந்ததால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
கடந்த 19-ந் தேதி கல்பட்டு கிராமத்தில் காளைவிடும் விழா நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு காளை விடும் விழாவை தொடங்கிவைக்க ஊராட்சி மன்ற தலைவர் திலகவதியும், அவரது கணவர் ஜீவரத்தினமும் அந்த வழியாக சென்றனர்.
அவர்களிடம் தங்கள் பகுதியில் குடிநீர் வசதியை சரிசெய்ய கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் அதே வழியாக வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனியை வழிமடக்கி, தண்ணீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து ஊராட்சி தலைவரிடம் பேசி விரைவில் சரி செய்யப்படும் என்று அவர் கூறினார். அதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து ஊராட்சி மன்றம் சார்பில், தற்காலிகமாக மாற்று ஏற்பாடு மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்