search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காணொளி காட்சி"

    • 780 நகர்புற நல்வாழ்வு மருத்துவமனைகளை தொடக்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
    • குத்துவிளக்கு ஏற்றி வைத்துபொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முழுவதும் நெருக்கடி உள்ள பகுதிகளிலும் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் மற்றும் குடிசை வாழ் பகுதிகளிலும் நகர்ப்புற மருத்துவ மனைகளை திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 780 நகர்புற நல்வாழ்வு மருத்துவமனைகளை தொடக்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தமிழகத்தில் 500 இடங்களில் நகர்புற நல வாழ்வு மையத்திதை றந்து வைத்தார். விழுப்புரம் நகரில் திருச்சி நெடுஞ்சாலை அண்ணா அறிவாலயம் பின்புறத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனைமையும், விழுப்புரம் பானாம்பட்டு அரசு பள்ளி அருகிலும் நகர்புற நல்வாழ்வு மையங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து வழுத ரெட்டி பகுதியில் டி.ஆர்..ஒ பரமேஸ்வரி, , எம். எல் .ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் மாவட்ட சேர்மன் ஜெய ச்சந்திரன் தலைமையில் , விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் விழுப்புரம் சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, துணை சேர்மன் சித்திக் அலி, கவுன்சிலர்கள் வித்திய சங்கரி பெரியார், மணவாளன், புருஷோத்தமன், சங்கர் சிவகுமார், விழுப்புரம் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சுரேஷ், துணை இயக்குனர் பொற்கொடி, தாசில்தார் வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் செயலாளர் சக்கரை, மாவட்ட துணை செய லாளர் தயாஇளந்திரையன், முன்னாள் கவுன்சிலர் முத்து கணேசன், பொறியாளர் பிரிவு பரத், தி.மு.க. வார்டு செயலாளர்கள் சிட்டிபாபு, விஜய் சேதுபதி, டாக்டர் தாமரை மணவாளன், பெரியார் நகர் தீவனுரான், முன்னாள் முகாம் அமைப்பாளர் ஓவியர் காசிலிங்கம் கலந்து கொண்டனர் முடிவில் நல்வாழ்வு மைய மருத்துவமனை டாக்டர் நன்றி கூறினார்.

    ×