search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரசார் போராட்டம்"

    ஒடிஷா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கார் மீது அழுகிய தக்காளிகளை வீசிய காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். #CMNaveenPatnaik

    பூரி:

    ஒடிஷா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    முதல்-மந்திரி பட்நாயக் பூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார்.

    பூரி, கோனார்க் தேசிய நெடுஞ்சாலையில் முதல்- மந்திரி கார் சென்றபோது காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு திரண்டு நவீன் பட்நாயக்குக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். அதோடு கருப்புக் கொடியும் காட்டினார்கள்.

    சில காங்கிரஸ் தொண்டர்கள் முதல்-மந்திரி கார் மீது அழுகிய தக்காளிகளை வீசினார்கள். இதை நவீன் பட்நாயக்கும், அதிகாரிகளும் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்பில் உள்ள குறைபாடே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்-மந்திரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பஞ்சாபில் ஏற்பட்ட இந்த குளறுபடி குறித்து டி.ஜி.பி. சர்மா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். நவீன் பட்நாயக் கார் மீது தக்காளிகளை வீசிய காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். #CMNaveenPatnaik

    ×