search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு"

    • ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் தலைமை யிலும், ஒன்றிய குழு துணைத்தலைவர் முன்னிலை யிலும் நடைபெற்றது.
    • சரமாரியாக புகார்களை அனைத்து கவுன்சிலர்களும் கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் தலைமை யிலும், ஒன்றிய குழு துணைத்தலைவர் வரதராஜன் முன்னிலை யிலும் நடைபெற்றது.

    கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட இருந்த நிலையில் கூட்டம் ஆரம்பித்த உடனே ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கிராம ஊராட்சி ஆணை யாளர் மலர்விழி மீது அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 17 ஒன்றிய கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றச்சாட்டு களை கூறினர்.

    முறையாக தெரிவிக்கா மல் தன்னிச்சையாக செயல்பட்டு ஒரு சில ஊரா ட்சிகளுக்கு பாரபட்சமாக பணிகள் செய்யப்பட்டு ள்ளது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளி கள் தேர்வு செய்யப்பட்டதை ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர், கிராம பஞ்சாயத்து இயக்கு னர் என மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது ஒன்றியகுழு தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சி லர்களுக்கு தகவல் தெரி விப்பதில்லை. புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகளை ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்துகி றோம் என்ற பெயரில் உடைத்து சேதப்படுத்தி பல மாதங்கள் ஆகியும் புதுப்பி க்கப்படாமல் உள்ளது. அதனை ஒப்பந்ததாரர்கள் புதுப்பித்து தர வேண்டும் என சரமாரியாக புகார்களை அனைத்து கவுன்சிலர்களும் கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் தனக்குத் தெரியாமல் பல்வேறு வேலைகள் நடந்து வருவதாகவும், தனக்கு ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர்கள் முறையாக தகவல் தெரிவிப்பது இல்லை என்றும் சரமாரி யாக புகார் கூறினார்.

    ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பால கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் அனைவரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வருங்காலங்களில் செயல்படுவதாகவும், அடிப்படை தேவைகள், அவசரமாக தேவைப்பட்ட ஒரு சில ஊராட்சிகளுக்கு பணிகளை மேற்கொ ண்டதால் முறையாக தகவல் தெரிவிக்க முடியவில்லை என்று விளக்கமளித்தார்.

    ×