search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் கிரண் பேடி"

    புதுவையில் அதிக அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக எனக்கு கோப்புகள் வரவில்லை என்று கவர்னர் கிரண் பேடி கூறி உள்ளார்.
    புதுச்சேரி:

    டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்றும் கவர்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார்.

    ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம், கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டு ஒரு உத்தரவையும் பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இவ்வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தும் தீர்ப்பளித்தது.

    இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஜூன் 6-ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் அனைத்து செயலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி செயல்படுங்கள் என்றும், அவ்வாறு செயல்படாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் கவர்னருக்கு எந்தவித கோப்பும் அனுப்பப்படவில்லை என தெரிகிறது.

    இந்த நிலையில் கவர்னர் கிரண் பேடி விதிகள் ஏதும் மாறாத நிலையில் தனக்கு கோப்புகள் ஏதும் வரவில்லை என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கவர்னர் கிரண் பேடி தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை நிர்வாகி என்ற கடமையில் பொதுமக்களுக்கு சில கருத்துக்களை தெரிவிக்க வேண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு எந்த கோப்பையும் கவர்னர் மாளிகைக்கு அனுப்பவில்லை.

    புதுவை யூனியன் பிரதேச சட்டம், அலுவல் விதிகள், நிதி சட்டம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. இதுதொடர்பாக எந்த திருத்தமும் செய்யப்படாமல் அப்படியேதான் உள்ளது.

    இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக அரசு நிர்வாகத்தை தலையீடு செய்த கவர்னர் கிரண் பேடிக்கு கம்யூனிஸ்டுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு செலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், கம்யூனிஸ்டு (எம்.எல்.) செயலாளர் பால சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா ஆட்சி நாட்டு மக்கள் தலையில் பெரிய பொருளாதார சுமையை சுமத்தி இருக்கிறது. தாங்க முடியாத அளவில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை அறிவித்து இருக்கிறது.

    ஜனநாயக பாதையை விட்டு விட்டு எதேச்சதிகார, சர்வதிகார ஆட்சியை நடத்தி, நாட்டு மக்களுடைய வாழ்க்கையை சீரழித்து விட்ட 4ஆண்டு கால மோடியின் சீர்கெட்ட ஆட்சியை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஆதரவு அளித்த வணிக பெருமக்கள், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து துறையினர், திரையரங்க உரிமையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

    இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக அரசு நிர்வாகத்தை தலையீடு செய்த கவர்னர் கிரண் பேடியின் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

    மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளின் இருந்த மீள்வதற்கு, மக்களே இந்த முழு அமைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து மோடி ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். #KiranBedi
    ×