search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழுமலையாறு படித்துறை சீரமைப்பு"

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் கழுமலையாறு படித்துறையை தூர்வாரி சீரமைத்து கொடுத்த விவசாயிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் கழுமலையாறு உள்ளது. இந்த ஆற்றை நம்பி தில்லைவிடங்கன், திட்டை, திருத்தோணிபுரம், தென்பாதி, சீர்காழி, அகணி, கொண்டல், வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, கைவிளாஞ்சேரி உள்ளிட்ட கிராஙம்களை சேர்ந்த விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் கழுமலையாறு சீர்காழி நகர் பகுதியின் வடிகாலாகவும் இருந்து வருகிறது.

    இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் எதிரில் மயிலாடுதுறை சாலையில் கழுமலையாற்றில் இரு புறமும் படித்துறை இருந்து வந்தது. இதனை சீர்காழி, தென்பாதி மற்றும் நகர்வாசிகள் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் பயன் படுத்தி வந்தனர். ஆனால், காலப்போக்கில் படித்துறை முறையாக பராமரிக்கப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு படித்துறை மண்ணை போட்டு மூடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்கள் கழுமலையாற்றில் உள்ள படித்துறையை சீரமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் இதுநாள் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி படித்துறையை சீரமைக்காததால் நேற்று கழுமலையாறு பாசன சங்கம் சார்பில் விவசாயிகள் படித்துறைக்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடந்த 10 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்திருந்த படித்துறையை சீரமைத்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் படித்துறையை சீரமைத்து கொடுத்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

    ×