search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளச் சாராய விற்பனை"

    சீர்காழி அருகே சாலையின் குறுக்கே மதுபாட்டில்களை தொங்கவிட்டு கள்ளச் சாராய விற்பனைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், சீர்காழி அருகே வேட்டங்குடி மற்றும் வேட்டங்குடி ஊராட்சியை சேர்ந்த வாடி, வேம்படி, இருவக்கொல்லை ஆகிய கிராமங்களில் இரவும் பகலும் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மதுபிரியர்கள் வெளியூர்களில் இருந்து வந்து மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். 

    மதுபாட்டில்கள் முக்கிய பொது இடங்களான பள்ளி, மற்றும் ஆரம்ப சுகாதாரநிலைய கட்டிடம் உள்ளிட்ட இடங்களில் விற்கப்படுவதால் ஊர் பொதுமக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

    அப்பகுதியில் விற்கப்படும் மதுபாட்டில்கள் போலி மதுபாட்டில்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதனை கண்டித்து வேட்டங்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சாலையின் குறுக்கே மதுபாட்டில்கள் மற்றும் கருப்பு துணி ஆகியவைகளை தோரணமாக கட்டி தொங்கவிட்டு பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×