என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலெக்டர் வளர்மதி தகவல்"
- உதவி கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது
- கலெக்டர் வளர்மதி தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் வருகிற 24-ந் தேதி முதல் 31 -ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.
இதன்படி கலவை தாலுகா அலுவலகத்தில் வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், அதே தேதிகளில் சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும் நடக்கிறது. வாலாஜா தாலுகா அலுவலகத்தில் 24, 25, 26, 30 ஆகிய தேதிகளில் கலால் உதவி ஆணையர் தலைமையிலும், 24 ,25, 26, 30, 31 ஆகிய தேதிகளில் ஆற்காடு தாலுகா அலுவல கத்தில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் தலைமை யிலும் நடைபெறுகிறது.
நெமிலி தாலுகா அலுவலகத்தில் அரக்கோணம் உதவி கலெக்டர் தலைமையிலும், அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், அரசு நலத்திட்டங்களின் கீழ் உதவி கோருதல், கிராம வளர்ச்சிக்கான திட்ட பணிகள், குடிநீர் சாலை வசதி மற்றும் இதர தேவைகள் தொடர்பான மனுக்கள் ஜமாபந்தி அலுவலரால் பெறப்படும். ஒரு கிராமத்தில் சம்பந்தப்பட்ட மனுக்கள் கிராம கணக்குகள் தணிக்கை நாள் அன்று அளிக்க வேண்டும்.
முன்னதாக கொடுக்கப்படும் மனுக்கள் அந்த கிராம தணிக்கை நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் .
தபால் மூலமாக மனு அனுப்ப விரும்புவர்களும் ஜமாபந்தி அலுவலருக்கோ அல்லது தாசில்தாருக்கோ அனுப்பலாம். இந்த தகவலை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்