என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கப்பல் மோதல்"
- தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு சென்று கொண்டிருந்த இழுவை கப்பல் மீனவர்கள் விசைப்படகு மீது மோதியது.
- குமரி மாவட்ட மீனவர்கள் தங்களது இல்லங்களுக்கு வந்து சேர்ந்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் தூத்துறை சேர்ந்த பைஜு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 7 பேர், புதுவை மாநிலம் மற்றும் கடலூர் பகுதியை சேர்ந்த 2 பேர், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர், கேரளா சேர்ந்த ஒருவர் உட்பட 12 மீனவர்கள் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு சென்று கொண்டிருந்த இழுவை கப்பல் மீனவர்கள் விசைப்படகு மீது மோதியது. இதில் அவர்களது விசைப்படகு நடுகடலில் மூழ்கியது. 12 மீனவர்களும் கடலிலே தத்தளித்துக்கொண்டிருந்த நேரத்தில் விபத்து ஏற்ப டுத்திய இழுவை கப்பல் 12 மீனவர்களை மீட்டு மாலத்தீவு கொண்டு சேர்த்தது.
மாலத்தீவு அதிகாரிகள் 12 மீனவர்களையும் விசாரணை கைதிகளாக மாலத்தீவில் வைத்திருந்தனர். மாலத்தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்து சென்று 12 இந்திய மீனவர்களையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.
பின்னர் மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இதையடுத்து 12 மீனவர்களும் விமானம் மூலம் மாலத்தீவில் இருந்து மும்பை வந்து சேர்ந்தனர்.
பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நேற்றிரவு 11 மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். அங்கி ருந்து மீனவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
குமரி மாவட்ட மீனவர்கள் தங்களது இல்லங்களுக்கு வந்து சேர்ந்தனர். வீடுகளுக்கு வந்த மீனவர்களை அவரது உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர். மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட மாலத்தீவு இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெற்காசிய மீனவர் தோழமை பணி சர்ச்சில் நன்றி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்