search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்தியுடன் ரகளை"

    • பெங்களூரை சேர்ந்தவர்
    • காதலியிடம் தீவிர விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக் கப்பட்டனர்.

    அரசு விடு முறை தினம் என்பதால், வழக்கத்தைவிட பக்தர் கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. எனவே, ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், தெற்கு கோபுரம் வாசல் வழியாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், தெற்கு கோபுரம் எனப்படும் திரு மஞ்சன கோபுரம் வழி யாக கோவிலுக்குள் ஒரு இளம்பெண்ணுடன் வந்த வாலிபர், சிறிது நேரம் அங்கும் இங்குமாக சுற்றித்தி ரிந்தார். மதுபோதையில் இருந்த அந்த வாலிபரின் கையில் கத்தி இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சிய டைந்தனர்.

    மேலும், திடீரென கோவில் 4-ம் பிரகாரத்தில் உள்ள இணை ஆணையரின் நிர்வாக அலுவலகத் துக்குள் நுழைந்து ரகளை யில் ஈடுபட்டார்.

    மேலும், அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார், அதோடு, அலுவலக அறைக்குள் நுழைந்த அந்த வாலிபர், ஆணையரின் இருக்கையில் அமர்ந்து கொண்டார். அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்த வாலிபரின் அதிரடி யால் அங்கிருந்த ஊழியர் கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர்.

    ஆனால், கத்தியை காட்டி மிரட்டியபடி நிர்வாக அலுவலகத்துக்கு அருகே உள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளி கட்டிடத்துக்குள் நுழைந்தார். அங்கிருந்த சுவற்றின் மீது ஏறி, பயிற்சிபள்ளியின் மேற்கூரையை உடைந்து உள்ளே குதித்து, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினார்.

    இது குறித்த தகவல் பரவியதும், போலீசார் விரைந்து வந்தனர். கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களின் உதவி யுடன் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.

    பின்னர், கைகளை யும், கால்களையும் கட்டி னர். அதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசார ணையில், பெங்களூரு காவல்பை சந்திரா தொட்டா நகரை ச்சேர்ந்த பிரேம்குமார் மகன் பிரத்தம் (வயது 23) என்பது தெரியவந் தது.

    மேலும், அந்த வாலிப ருடன் வந்த இளம்பெண் பெங்களூரு நிக்சல்பாக் தேவி ரோடு பகுதியை சேர்ந்த ஜெனிபர் (21) என்ப தும், இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்த தும் விசாரணையில் தெரி யவந்துள்ளது.

    மேலும், ஜெனிபரிடம் நடத்திய விசாரணையில், 'பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு பைக்கில் வரும் வழியில், இரண்டு பைக்கிலும், ஒரு காரிலும் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சிலர், எங்களை தாக்க முயன்றனர்.

    மயக்க மருந்து போன்ற ஸ்பிரே அடித்த னர். எனவே, அவர்களி டம் இருந்து தப்பிக்கவே. கோவிலுக்குள் வந்தோம்' என்றார். ஆனால், அவர் முன்னுக்குப் பின் முர ணாக தெரிவித்த பதில் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    எனவே, இருவரும் தெரிவித்த முகவரிக்கு நேரில் சென்று, அவர் களுடைய பின்னணியை முழுமையாக விசாரிக்க போலீசார் முடிவு செய் துள்ளனர்.

    மேலும் இது தொடர்பாக, கோவில் நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வாலிபர் பிரத்தத்தை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப் பையும் ஏற்படுத்தியது.

    ×