search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் விஷம் குடித்து"

    • பரிசோதனையில் பிரபாகரன் விஷம் குடித்திருப்பது தெரிய வந்தது.
    • போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் நித்யா (வயது 44). இவரது கணவர் பிரபாகரன் (51). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் மொட்டை மாடி யில் பிரபாகரன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த நித்யா உடனே பிரபாகரனை ஆம்புலன்சில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரபாகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் பிரபாகரன் விஷம் குடித்திருப்பது தெரிய வந்தது.

    பின்னர் இதுகுறித்து நித்யா கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் போரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×