search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் சில்வர் பீச்"

    கடலூர் சில்வர் பீச் கடலில் குளித்த பெண் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள உண்ணாமலை செட்டிச்சாவடி பனங்காட்டுகாலனியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் கடலூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பவானி(வயது 24). இவர்களுக்கு கவுதம்(2) என்ற மகன் உள்ளான். 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் கடலூர் சில்வர் பீச்சுக்கு வந்தனர். 

    பவானி, கடலில் குளித்தார். அப்போது எழுந்த ராட்சத அலை, பவானியை கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன், ஓடிச்சென்று பவானியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே பவானி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×