search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டியவருக்கு"

    • கோர்ட்டு தீர்ப்பு
    • குளச்சல் போலீசார் அஜ்மல்கான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    குளச்சல், நவ.18-

    குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்த வர் ஞானப்பிரகாசம் (வயது 80). இவர் கடந்த 2010 ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந்தேதி நடந்து குளச்சல் வந்து விட்டு இரவு வீட் டிற்கு திரும்பி சென்றார். சைமன் காலனி பாலம் அருகில் குறும்பனை சாலை யில் நடந்து செல்லும்போது, குறும்பனையிலிருந்து குளச்சல் நோக்கி வந்து கொண்டிருந்த கொம்பன் விளாகத்தை சேர்ந்த லாரி டிரைவர் அஜ்மல்கான் (33) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் ஞானப்பிரகாசம் மீது மோதி யது. படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். மறுநாள் சிகிச்சை பலனின்றி ஞானப்பிர காசம் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து குளச்சல் போலீசார் அஜ்மல்கான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு இரணியல் ஜே.எம்.கோர்ட்டில் கடந்த 13 வருடமாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி அமீர்தீன், அஜ்மல்கானுக்கு 2 வருடம் சிறைத்தண்டனை யும், ரூ.10 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பு அளித் தார்.

    ×