search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓசியில் பெட்ரோல்"

    • ஜெயிலில் அடைக்கப்பட்டனர்
    • கேமரா காட்சியால் சிக்கினர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கூட்டுச்சாலை அருகே பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் 2 பைக்கில் குடி போதையில் 5 பேர் வந்தனர் கும்பல், ஓசியில் பெட்ரோல் போடச் சொல்லி மிரட்டியது.

    இதற்கு மறுப்பு தெரிவித்த ஊழியர்களை போதை கும்பல் வெறித்தனமாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

    பெட்ரோல் பங்க் ஊழியர்களை கும்பல் தாக்கும் காட்சி அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் கேமராவில் பதிவாகி இருக்கும் போதை கும்பலை போலீசார் தேடினர்.

    இதன் மூலம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கொட்டை கிராமத்தை சேர்ந்த பார்த்தசாரதி (வயது26), (22) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

    ×