search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்த ஊழியர்"

    • ஒப்பந்த ஊழியர்களை அனைத்து பகுதியில் உள்ள சேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.
    • ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் நேற்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோபாலன் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் எம்பிளாய் யூனியன் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    ஒப்பந்த ஊழியர்களை அனைத்து பகுதியில் உள்ள சேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை ஆள் குறைப்பு செய்யக்கூடாது. ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும்.

    7-வது ஊதிய குழுவின் வழிமுறையை பின்பற்றி ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உமாராணி, பழனி, பாஸ்கரன், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×