search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏழைகளுக்கு உதவி"

    • தொண்டியில் ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி, புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • 250 ஏழை குடும்பங்களுக்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை த.மு.மு.க.வினர் வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி, புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பேரூர் தலைவர் சையது அப்துல் காதர் தலைமையில் 250 ஏழை குடும்பங்களுக்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை த.மு.மு.க.வினர் வழங்கினர்.

    மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜிப்ரி, தி.மு.க. பேரூர் செயலாளர் இஸ்மத்நானா, தொண்டி பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சுலைமான், ம.ம.க. மாவட்ட துணைசெயலாளர் தொண்டி ராஜ், ஒன்றிய செயலாளர் காமராஜ், செயலாளர் பரக்கத் அலி, த.மு.மு.க. பொருளாளர் மைதீன், துணை தலைவர் ஹம்மாது சலிம் அப்துல்லா, அப்துல்ரஹிம் மவ்லானா இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×