search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏடிபி டென்னிஸ்"

    உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை தோற்கடித்தார் ஸ்வெரேவ்.
    துரின்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்றது.

    நேற்று நடந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான ரஷ்யாவைச் சேர்ந்த டேனில் மெட்வடேவும், ஒலிம்பிக் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவும் மோதினர்.

    இதில், ஸ்வெரேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் மெட்வடேவை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

    ஏடிபி இறுதிச்சுற்று உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்வெரேவ் பெறும் இரண்டாவது டைட்டில் இதுவாகும்.

    ஏடிபி டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டம் பெற்றார். #AlexanderZverev #ATPFinals #NovakDjokovic
    லண்டன்:

    ஏ.டி.பி. டூர் டென்னிஸ் இறுதி சுற்று லண்டனில் நடந்தது. ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டம் பெற்றார்.



    அவர் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ வீரரான ஜோகோவிச்சை (செர்பியா) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார். #AlexanderZverev #ATPFinals #NovakDjokovic
    ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #ATPFinal #RogerFederer #AlexanderZverev
    லண்டன்:

    டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச்(செர்பியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

    நேற்று நடந்த முதலாவது அரைஇறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர், 5-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்தித்தார். 1 மணி 35 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பெடரர் 5-7, 6-7 (5-7) என்ற நேர்செட்டில் அலெக்சாண்டர் ஸ்வேரேவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டோமினக் தீயமை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார். #ATPFinal #RogerFederer #DominicThiem
    லண்டன்:

    ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-3 என்ற செட் கணக்கில் டோமினக் தீயமை (ஆஸ்திரியா) தோற்கடித்தார். பெடரர் தொடக்க ஆட்டத்தில் நிஷிகோரியிடம் (ஜப்பான்) தோற்று இருந்தார். தற்போது அவர் முதல் வெற்றியை பெற்றார்.

    பெடரர் கடைசி ஆட்டத் தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஆண்டர்சனை சந்திக்கிறார். ஆண்டர்சன் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தார். #ATPFinal #RogerFederer #DominicThiem
    ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் வெற்றி பெற்றார்கள். #ATPFinal #Djokovic
    ‘டாப் 8’ வீரர்கள் இடையிலான ஏடிபி பைனல் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. ‘குகா குயர்டன்’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜோகோவிச் - ஜான் இஸ்னெர் ஒரு ஆட்டத்தில் மோதினார்கள். இதில் நம்பர் ஒன் வீரரா ஜோகோவிச் 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.



    இதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் -மரின் சிலிச் பலப்பரீட்சை நடத்தினார்கள்.இதில் இரண்டு செட்டுகளும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(7) - 7(6), 7(7) - 7(1) என அலெக்சாண்டர் கடும் போராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்றார்.
    ×