search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.பி. திடீர் ஆய்வு"

    • போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்
    • அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் என அறிவுரை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள வாகன சோதனை மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் நேற்று திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    போலீஸ் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×