search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.பி.ஆரூண் வாழ்த்து"

    • தி.மு.க மகளிரணி உரிமை மாநாடு இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
    • மாநாடு வெற்றிபெற வாழ்த்து தெரிவிப்பதாகவும், மாநாட்டிற்கு வரும் அனைத்து தலைவர்களையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

    போடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க மகளிரணி சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் உரிமை மாநாடு இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல பெண் தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

    சென்னைக்கு வந்த சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் சொத்து பாது காப்பு கமிட்டி தலைவரும், தேனி தொகுதியின் முன்னாள் எம்.பியுமான ஆரூண் கூறுகையில்,

    மாநாடு வெற்றிபெற வாழ்த்து தெரிவிப்பதாகவும், மாநாட்டிற்கு வரும் அனைத்து தலைவர்களையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளார். இதேபோல் வேளச்சேரி எம்.எல்.ஏ அசன் மவுலானா, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் இம்ரான்கான் ஆகியோர் பிரமுகர்களை வரவேற்றனர்.

    ×