search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என இருபோக"

    • மதகுகள் வழியாக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • குமரி மாவட்டத்தில் கன்னிபூ, கும்பப்பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னிபூ, கும்பப்பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும், பாசன குளத்தை நம்பியும் சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னிபூ சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. கன்னிபூ சாகு படிக்காக ஆண்டுதோறும் ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று பேச்சிப்பாறை அணை திறக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டி ருந்தது. இதையடுத்து இன்று காலை பேச்சிப்பாறை அணையின் அடிவாரத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜ் அணையின் மதகுகளை திறந்து வைத்தார். கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதும் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. அந்த தண்ணீரில் பூக்கள் தூவப்பட்டது. அணையிலிருந்து இன்று 100 கன அடி தண்ணீர் வெளியிட்டப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் தோவாளை சானல் மற்றும் அனந்தனார் சானலில் திறந்து விடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 40.55 அடியாக இருந்தது. அணைக்கு 496 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து பெருஞ்சாணி அணையில் இருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று நிறுத்தப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 41.50 அடியாக உள்ளது. அணைக்கு 70 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. சிற்றாறு -1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றாறு -2 அணையின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது.

    ×