search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணை கிணறு"

    • 2012-ம் ஆண்டில் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தினால் அமைக்கப்பட்ட துரப்பணக் கிணற்றில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக மேற்கண்ட துரப்பணக் கிணறு இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தினரால் 2013-ம் ஆண்டிலேயே அப்போதுள்ள கருவிகளுடன் தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது.
    • இக்கிணற்றிைன தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப கருவியுடன் சரியான முறையில் மூடிட மாவட்ட நிர்வாகத்தினரிடம் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தினரால் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், சேந்த மங்கலம் வருவாய் கிராமம், பெரியகுடி உட்கிராமத்தில் 2012-ம் ஆண்டில் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தினால் அமைக்கப்பட்ட துரப்பணக் கிணற்றில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக மேற்கண்ட துரப்பணக் கிணறு இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தினரால் 2013-ம் ஆண்டிலேயே அப்போதுள்ள கருவிகளுடன் தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது.

    இக்கிணற்றிைன தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப கருவியுடன் சரியான முறையில் மூடிட மாவட்ட நிர்வாகத்தினரிடம் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தினரால் கோரிக்கை விடுவிக்கப்பட்டது. அதிக அழுத்தத்தினால் உள்ள இக்கிணற்றினை பொதுமக்களுக்கு பாதிப்பு மற்றும் பேரழிவு ஏற்படாமல் மூடிட மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றபின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், இக்கிணற்றில் வேறு எவ்வித பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்றும் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக்கழகத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×