search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உருது தமிழ்பள்ளி"

    • மேலூர் அல் அமீன் உருது தமிழ் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை தாளாளர் தொடங்கி வைத்தார்.
    • பள்ளியின் தலைவர் காதர்மைதீன் தலைமை தாங்கினார்.

    மேலூர்

    மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடந்தது. பள்ளியின் தலைவர் காதர்மைதீன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தார். தாளாளர் எம்.ஓ. சாகுல் ஹமீது கட்டிடத்தை திறந்து வைத்தார். ஸ்மார்ட் வகுப்பு காணொலி காட்சியை முன்னாள் மாணவர் மனோஜ்குமார் தொடங்கி வைத்து பேசினார். தலைமை ஆசிரியர் சலீம் வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர்கள் ஷாஜகான், ஜபார், ராஜா முகமது, காஜாமைதீன், சித்திக் ராஜா, பிலால்முகமது, ராஜாமுகமது, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நூர்ஜகான் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் அப்துல்ரஹ்மான் நன்றி கூறினார். மேலூர் தாலுகா அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேலூர் அல் அமீன் பள்ளியில் முதன்முதலாக ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×