search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்நீதிமன்றம் உத்தரவு"

    கொடநாடு விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #KodanadIssue #MKStalin
    சென்னை

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது கொடநாடு விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.



    இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, கொடநாடு விவகாரம் குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும், தமிழக அரசின் மனுவிற்கு ஏப்ரல் 3-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார். #KodanadIssue #MKStalin
    புத்தாண்டுக்குள் மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CleanMarina #MadrasHighCourt
    சென்னை:

    சென்னை வடபழனியில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். இந்தக் கட்டிடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால் இது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



    இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஜனவரி 3-ம் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

    மேலும், புத்தாண்டுக்குள் மெரினாவை தூய்மைப்படுத்த திட்டம் வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், முதலில் மெரினாவை சுத்தம் செய்யுங்கள், பின்னர் மாவட்டம், மாநிலத்தை சுத்தம் செய்யலாம் என்றனர். #CleanMarina #MadrasHighCourt
    இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #HelmetCase #MadrasHighCourt
    சென்னை:

    இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இன்று உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். கார்களில் பயணிப்போர் அனைவரும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.



    மேலும், சீட் பெல்ட் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து தமிழக அரசு வரும் 27ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுதவிர இருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது குறித்து தமிழக அரசு சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #HelmetCase #MadrasHighCourt
    ×