search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உமா பாரதி"

    • சிபிஐ நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
    • இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அலகாபாத்:

    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, சாத்வி ரிதாம்பரா, நிரித்ய கோபால் தாஸ் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அயோத்தியாவைச் சேர்ந்த இரண்டு இஸ்லாமியர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததுடன், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தனர்.

    • தனியார் துறையிலும் 10% இட ஒதுக்கீடு கொண்டுவர உமா பாரதி கோரிக்கை
    • எல்லா ஏழைகளும் ஒரே சாதி தான், அது ஏழை சாதி.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. இந்த இடஒதுக்கீடு அரசியலமைப்பின் கட்டமைப்பை மீறவில்லை என்று, தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் 3 நீதிபதிகள் இன்று வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஒரு உறுதியான நடவடிக்கை என்று தெரிவித்தார்.

    ஆனால் தமது கேள்வி என்னவென்றால், நாடு முழுவதும் வேலை பற்றாக்குறை நீடிக்கும் இந்த மோசமான சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மத்திய அரசால் செயல்படுத்த முடியுமா என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமாபாரதி அரசு பணிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியிருப்பது வரவேற்கதக்கது என்றும், தனியார் துறையிலும் 10% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    எல்லா ஏழைகளும் ஒரே சாதி தான், அது ஏழை என்ற சாதி. இந்த இடஒதுக்கீடு நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும், அனைத்து ஏழை மக்களும் ஒன்றிணைந்து தங்களுக்கான சிறந்த வாழ்க்கைக்காக போராட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×